செய்திகள்
முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் ‘தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்த மாட்டோம்’ - ஜெகன்மோகன் ரெட்டி

Published On 2019-12-23 20:37 GMT   |   Update On 2019-12-23 20:37 GMT
தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை ஆந்திர அரசு எதிர்ப்பதாகவும், எனவே அதை ஆந்திராவில் அமல்படுத்த மாட்டோம் என்று அந்த மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார்.
கடப்பா:

தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை ஆந்திர அரசு எதிர்ப்பதாகவும், எனவே அதை ஆந்திராவில் அமல்படுத்த மாட்டோம் என்று அந்த மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார்.

கடப்பா நகரில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில் இதை அறிவித்த அவர், சிறுபான்மையினர் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் வந்து தன்னை சந்தித்து, தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் ஆந்திர அரசின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், அவர்களிடம் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அரசு ஆதரிக்காது என்று தான் கூறியதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News