செய்திகள்
கார் மீது லாரி மோதிய விபத்து

மகாராஷ்டிரா: கார் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் பலி

Published On 2019-12-23 14:27 GMT   |   Update On 2019-12-23 14:27 GMT
மகாராஷ்டிராவில் இன்று கார் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம், ஜல்கான் மாவட்டத்தில் உள்ள மும்பை-நாக்பூர் தேசிய நெடுச்சாலையில் இன்று ஒரு கார் சென்றுகொண்டிருந்தது. 

பிம்பல்கோத்தா என்ற  கிராமத்தை கடந்தபோது சாலையின் எதிரே வந்த லாரி காரின் மீது வேகமாக மோதியது. 

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்த நபர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News