செய்திகள்
டெல்லியில் சோனியா, மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா காந்தி சத்தியாகிரகப் போராட்டம்
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ராஜ்கட் பகுதியில் சோனியா, மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா காந்தி ’ஒற்றுமைக்கான சத்தியாகிரகம்’ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுடெல்லி:
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையை மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வாசிக்க மற்றவர்களும் அதை வழிமொழிந்தனர்.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி ராஜ்கட் பகுதியில் ’ஒற்றுமைக்கான சத்தியாகிரகம்’ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையை மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வாசிக்க மற்றவர்களும் அதை வழிமொழிந்தனர்.