செய்திகள்
காங்கிரஸ்

ஜார்க்கண்ட் வாக்கு எண்ணிக்கை- காங்கிரஸ் கூட்டணி முந்துகிறது

Published On 2019-12-23 03:24 GMT   |   Update On 2019-12-23 03:24 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
ராஞ்சி:

81 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள மாநிலமாக இருந்தாலும், பெரும்பாலும் ஓட்டுப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஆட்சியமைக்க 42 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் ஆளும் பாஜக பின்தங்கியது. காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி முன்னிலை பெற்றது.

காலை 8.30 மணி நிலவரப்படி பாஜக 31 தொகுதிகளிலும், காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 34 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன. ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா 3 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.

கடந்த தேர்தலில் பாஜக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த  ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்துடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியமைத்தது. இந்த தேர்தலில் பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்டு தனித்து போட்டியிடுகிறது. எனினும் அவர்கள் போட்டியிடும் 2 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
Tags:    

Similar News