செய்திகள்
பிரியங்கா காந்தி

உ.பி. கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்தாரை சந்தித்து பிரியங்கா ஆறுதல்

Published On 2019-12-22 13:32 GMT   |   Update On 2019-12-22 13:32 GMT
குடியுரிமை சட்டத்தக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்ததில் கொல்லப்பட்ட இருவர் குடும்பத்தாரை பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.
லக்னோ:

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் சில மாநிலங்களில் வன்முறையாக வெடித்த சம்பவங்களில் 15-க்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

குறிப்பாக,  உத்தர பிரதேசம் மாநிலத்தில் மட்டும் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் கடந்த 20-ம் தேதி பிஜ்னோர் மாவட்டத்தில் நடந்த வன்முறையில் பலியாகினர்.



இந்நிலையில், கிழக்கு உத்தர பிரதேசம் மாநில காங்கிர பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டெல்லியில் இருந்து இன்று பிஜ்னோர் மாவட்டத்துக்கு வந்தார்.

நாஹ்தாவுர் பகுதியில் உள்ள கொல்லப்பட்ட இருவர் குடும்பத்தாரை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். 
Tags:    

Similar News