செய்திகள்
காங்கிரஸ்

காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் சிவசேனா பங்கேற்காதது ஏன்?: காங்கிரஸ் விளக்கம்

Published On 2019-12-20 01:53 GMT   |   Update On 2019-12-20 01:53 GMT
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் சிவசேனா கலந்து கொள்ளாதது குறித்து காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.
மும்பை :

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நேற்று மும்பை ஆகஸ்டு கிராந்தி மைதானத்தில் போராட்டம் நடத்தது. ஆனால் இந்த போராட்டத்தில் சிவசேனா கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து மும்பை காங்கிரஸ் தலைவர் ஏக்நாத் கெய்க்வாட்டிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், “தன்னார்வ அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது. அதன்பேரில் நாங்கள் கலந்து கொண்டோம். காங்கிரஸ் சார்பில் நடந்து இருந்தால் நாங்கள் மகா விகாஷ் அகாடி கூட்டணியில் உள்ள சிவசேனா உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து இருப்போம்” என்றார்.
Tags:    

Similar News