செய்திகள்
மம்தா பானர்ஜி

பொது வாக்கெடுப்பு நடத்தும் துணிச்சல் இருக்கிறதா? மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி சவால்

Published On 2019-12-19 22:17 GMT   |   Update On 2019-12-19 22:17 GMT
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தும் துணிச்சல் இருக்கிறதா? என மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.
கொல்கத்தா:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்தவகையில் கொல்கத்தாவில் நேற்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கட்சித்தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘தேர்தலில் பா.ஜனதா பெரும்பான்மை பெற்றதற்காக தாங்கள் விரும்பியதெல்லாம் செய்யலாம் என்பது அர்த்தமல்ல. அப்படி பா.ஜனதாவுக்கு துணிச்சல் இருந்தால் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக ஐ.நா. மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தட்டும். இந்த பொதுஜன வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் பதவி விலக வேண்டும். அதற்கு மத்திய அரசு தயாரா?’ என்று சவால் விடுத்தார். சர்ச்சைக்குரிய இந்த குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் மேற்கு வங்காளத்தில் அனுமதிக்கமாட்டோம் என சூளுரைத்த மம்தா பானர்ஜி, 1980-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பா.ஜனதா கட்சி, 1970-ம் ஆண்டின் குடியுரிமை ஆதாரங்களை கேட்பதாகவும் கிண்டலாக கூறினார்.
Tags:    

Similar News