செய்திகள்
டெல்லியில் முண்ட்கா பகுதியில் தீவிபத்து
தலைநகர் டெல்லியில் உள்ள முண்ட்கா பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
புதுடெல்லி:
வடக்கு டெல்லியில் உள்ள முண்ட்கா என்ற பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதுதொடர்பாக, தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 8-ம் தேதி டெல்லியில் அனாஜ் மண்டி என்ற பகுதியில் உள்ள 4 மாடி கட்டித்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.