செய்திகள்
குடியுரிமை சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுடெல்லி:
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் அமித் ஷா தாக்கல் செய்தார். இதற்கு எதிராகவும் ஆதராகவும் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.
இதற்கிடையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்பும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்பு கூடாது என 124 எம்.பி.க்களும் அனுப்ப வேண்டும் என 99 எம்.பி.க்களும் வாக்களித்திருந்ததால் 25 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது.
இதைத்தொடர்ந்து, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின.
இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவரது ஒப்புதல் கிடைக்கப்பெற்றதும் சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசு தலைவர் ஒப்புதலை அடுத்து திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் அமித் ஷா தாக்கல் செய்தார். இதற்கு எதிராகவும் ஆதராகவும் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.
இதற்கிடையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்பும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்பு கூடாது என 124 எம்.பி.க்களும் அனுப்ப வேண்டும் என 99 எம்.பி.க்களும் வாக்களித்திருந்ததால் 25 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது.
இதைத்தொடர்ந்து, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின.
இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவரது ஒப்புதல் கிடைக்கப்பெற்றதும் சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசு தலைவர் ஒப்புதலை அடுத்து திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.