செய்திகள்
கோப்புப் படம்

உ.பி.யில் கொடூரம்: சாக்லேட் கொடுத்து 4 வயது சிறுமி கற்பழிப்பு

Published On 2019-12-12 07:35 GMT   |   Update On 2019-12-12 07:35 GMT
உத்தர பிரதேச மாநிலத்தில் 4 வயது சிறுமி கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அரசியல் தலைவர்கள், மகளிர் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் என நாடு முழுவதும் அனைவரும் பெண்கள் பாதுகாப்பை  வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை.

ஒரு சில வக்கிரக்காரர்கள் பெண் குழந்தைகள், சிறுமிகளையும் கற்பழிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. பாலியல் குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என மகிளா காங்கிரஸ் சமீபத்தில் வலியுறுத்தியது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் 4 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் பேட்பூர் நகர் அருகே உள்ள ஹாத்கன் கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த மூல்சந்த் என்ற நபர் கடந்த 5ம் தேதி சாக்லேட் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்கு சிறுமியை தூக்கி சென்று கற்பழித்துள்ளார். சிறுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடியுள்ளார்.

சிறுமியின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் பெற்றோர் அந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

சிறுமி என்றும் பாராமல் இம்மாதிரியான கொடூரமான சம்பவங்களில் ஈடுபடும் வக்கிரக்காரர்களை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News