செய்திகள்
பிஎஸ்எல்வி சி48

பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது

Published On 2019-12-10 03:07 GMT   |   Update On 2019-12-10 12:09 GMT
பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் நாளை (புதன்கிழமை) மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
சென்னை:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமியை கண்காணிப்பதற்காக ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது.

இந்த செயற்கை கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலம் நாளை (புதன்கிழமை) மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.



ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, இறுதிக்கட்ட பணியான ‘கவுண்ட்டவுன்’ இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா 1 செயற்கைகோள், அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள் என வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களும் இந்த ராக்கெட்டில் வைத்து விண்ணுக்கு அனுப்பப்படுகின்றன.

பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கு இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ ஆன்-லைன் முகவரியில் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.

மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News