செய்திகள்
ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒடிசா பயணம்

Published On 2019-12-08 03:37 GMT   |   Update On 2019-12-08 03:37 GMT
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒடிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
புவனேஷ்வர்:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

அதன்பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று மாலை ஒடிசா மாநிலம் சென்றடைந்தார். அவரது மனைவி சபிதா கோவிந்தும் உடன் சென்றார்.

பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மாநில கவர்னர் கனேஷ் லால் மற்றும் முதல் மந்திரி நவீன் பட்நாயக் உள்ளிட்ட பலர் வரவேற்றனர். ஒடிசாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி ராம்நாத் கலந்து கொள்கிறார்.
Tags:    

Similar News