செய்திகள்
என்கவுண்டர் குறித்து விளக்கமளித்த போலீசார்

ஐதராபாத் - எரித்துக் கொல்லப்பட்ட பெண் டாக்டரின் செல்போன் கிடைத்தது

Published On 2019-12-06 10:28 GMT   |   Update On 2019-12-06 10:28 GMT
தெலுங்கானாவில் கற்பழித்துக் கொல்லப்பட்ட பெண் டாக்டரின் செல்போன் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஐதராபாத்:

தெலுங்கானாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் லாரி தொழிலாளர்கள் சென்ன கேசலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகிய 4 பேரையும் போலீசார் கடந்த 29-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, தெலுங்கானாவில் பெண் கால்நடை மருத்துவரை எரித்துக் கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், என்கவுண்டர் குறித்து விளக்கம் அளித்த தெலுங்கானா மாநில போலீசார், பெண் டாக்டரை எரித்துக் கொல்லப்பட்ட இடத்துக்கு குற்றவாளிகளை இன்று காலை அழைத்துச் சென்றோம். அங்கிருந்து பெண் டாக்டரின் செல்போனைக் கைப்பற்றி உள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்துவோம் என தெரிவித்தனர்.
Tags:    

Similar News