செய்திகள்
நித்யானந்தா

கடவுள் என்னை நேரடியாக களம் இறங்கி காப்பாற்றுகிறார்- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு

Published On 2019-12-04 06:00 GMT   |   Update On 2019-12-04 06:00 GMT
சர்வதேச அளவில் தனக்கு எதிராக மிகப்பெரிய சதி நடப்பதாகவும் அதில் இருந்து கடவுள் நேரடியாக களம் இறங்கி தன்னை காப்பாற்றுவதாகவும் புதியதாக வெளியிட்டுள்ள வீடியோவில் நித்யானந்தா பேசியுள்ளார்.
பெங்களூர்:

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சாமியார் நித்யானந்தா மீது குஜராத் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவரின் 2 மகள்களை அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் கடத்தி சிறை வைத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போலீசார் தேடுவதை அறிந்த நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடிவிட்டார். அவர் ஈக்குவடார் நாட்டில் ஒரு தீவில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தலைமறைவாக இருந்தாலும் அவர் சமூகவலைதளங்ளில் வீடியோக்களை வெளியிட்டு ஆசிரம நிர்வாகிகளிடம் பேசி வருகிறார். அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் தனக்கு எதிராக சர்வதேச சதி நடப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வீடியோவில் கூறி இருப்பதாவது:-

என் மீதும், ஆசிரமத்தின் மீதும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்காக பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய சதி செய்து எனக்கு எதிராக இதை நடத்துகிறார்கள்.

இதில் ஒரு நல்ல வி‌ஷயம் என்னவென்றால், எனக்கு எதிரான அனைத்து செயல்களும் ஆவணப்படுத்தப்படுகின்றன. சர்வதேச சமூகம் இதைச் கவனித்துக் கொண்டிருக்கிறது.

இத்தனைக்கும் இடையே நான் உயிரோடு இருப்பதற்கு கடவுள் தான் காரணம். என்னையும் எனது பீடத்தையும் பரமசிவனும், காலபைரவரும் பராசக்தியும்தான் காப்பாற்றுகின்றனர். அதுவும் நேரடியாக களம் இறங்கி காத்து வருகின்றனர்.

நான் ஒரு புறம்போக்கு, பரதேசி. என்னை யாராலும் பயமுறுத்த முடியாது. மானம், அவமானத்தை பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதே இல்லை.

இவ்வாறு வீடியோவில் அவர் பேசி உள்ளார்.
Tags:    

Similar News