செய்திகள்
மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு

Published On 2019-12-03 13:40 GMT   |   Update On 2019-12-03 13:40 GMT
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்கவுள்ளது.
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கைதாகி 100 நாட்களுக்கு மேல் ஆகிறது.

அவரது வழக்கறிஞர்கள் சி.பி.ஐ. நீதிமன்றத்திலும், டெல்லி ஐகோர்ட்டிலும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன.



இதைதொடர்ந்து, டெல்லி ஐகோர்ட்  ஜாமீன் வழங்க மறுத்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது நீதிபதி பி.பானுமதி தலைமையிலான அமர்வின் முன்னர் சிதம்பரம் தரப்பு மற்றும் சி.பி.ஐ., அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர்களின் வாதப்பிரதிவாதங்கள் கடந்த மாதம் 28-ம் தேதியுடன் நிறைவடைந்து, தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ஜாமின் மனு மீது நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்கவுள்ளது.
Tags:    

Similar News