செய்திகள்
பிரதமர் மோடி உரையாற்றிய காட்சி

நக்சலிசத்தின் முதுகெலும்பை பாஜக அரசு முறித்துள்ளது - ஜார்க்கண்டில் மோடி பெருமிதம்

Published On 2019-12-03 10:17 GMT   |   Update On 2019-12-03 10:17 GMT
பாஜக அரசால் மட்டுமே முன்னேற்றத்தை அளிக்க முடியும் என ஜார்க்கண்ட் மக்கள் நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு  நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன.
 
முதல்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் என 13 தொகுதிகளில் நவம்பர் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இரண்டாம்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்து வருகிறார்.

இன்றைய பிரசார கூட்டத்தில் பேசிய மோடி கூறியதாவது:-

ராமர் இளவரசராக அயோத்தியை விட்டு 14 ஆண்டுகள் வனவாசம் சென்றார். காடுகளில் ஆதிவாசி மக்களுடன் வாழ்ந்துப் பழகியப் பின்னர் ‘மரியாதை புருஷோத்தமன்’ ஆக மீண்டும் அயோத்திக்கு வந்து நாடாண்டார்.

ஜார்ஜண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி இங்கு ஆட்சி செய்தபோது முதல் மந்திரி நாற்காலி விலைக்கு விற்கப்பட்டது. அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஊழலும் கொள்ளையும்தான் முக்கிய செய்திகளாக வந்தனர். பல தலைவர்கள் இன்னும் ஊழல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர்.

ஜார்ஜண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ்  கூட்டணி அரசியல் வஞ்சகம் மற்றும் துரோகத்தின் அடிப்படையிலானது. பாஜகவின் அரசியல் மக்கள் சேவையை அடிப்படையாக கொண்டது. எங்கள் ஆட்சிக் காலத்தில் நக்சலிசத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் பதிவான வாக்கு சதவீதத்தை வைத்து பார்க்கும்போது பாஜக மீதும் தாமரை சின்னத்தின் மீதும் மக்கள வைத்துள்ள நம்பிக்கை மிக தெளிவாக தெரிகிறது. இந்த மாநிலத்தின் முன்னேற்றத்தை பாஜக ஆட்சியால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என ஜார்க்கண்ட் மக்கள் நம்புகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News