செய்திகள்
திருப்பதியில் விசாரணைக்காக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழக வாலிபர்கள்

திருப்பதியில் தமிழக வாலிபர்கள் 30 பேரிடம் விசாரணை

Published On 2019-11-30 08:16 GMT   |   Update On 2019-11-30 08:16 GMT
திருப்பதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் 30 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
திருமலை:

திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் போலீசார் கோவில் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது 30 பேர் கொண்ட கும்பல் சந்தேகத்திற்கு இடமாக அங்கும் இங்கும் சுற்றி திரிந்து கொண்டிருந்தனர்.

இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் 30 பேரையும் பிடித்து அலுவலகம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர்கள் 30 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அவர்களிடம் தனித்தனியாக விவரங்களை போலீசார் சேகரித்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து பிஸ்கட், பிரட், சமையல் செய்ய தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். செம்மரம் கடத்த வந்த கும்பலா என போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

Similar News