செய்திகள்
சோனியா காந்தி

பாஜகவின் முறைகேடுகள் பற்றி பாராளுமன்றத்தில் உரக்க வலியுறுத்த வேண்டும் -சோனியா காந்தி

Published On 2019-11-28 05:04 GMT   |   Update On 2019-11-28 05:04 GMT
பாஜகவின் முறைகேடுகள் பற்றி பாராளுமன்றத்தில் உரக்க வலியுறுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்பிக்களுக்கு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்றக் குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:-

பாஜக அரசில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் உரக்க வலியுறுத்தவேண்டும். 

நாட்டில் லாபம் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள், பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் பாஜக மேற்கொண்ட செயல்பாடுகள் வெட்கக்கேடானது. 

ஜம்மு-காஷ்மீரில் தேசிய தலைவர்களை அனுமதிக்காத பாஜக, ஐரோப்பிய தலைவர்களை அனுமதிக்கிறது. 

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News