செய்திகள்
பாத்திமா

சபரிமலைக்கு செல்ல விரும்பிய பாத்திமாவுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் மறுப்பு

Published On 2019-11-24 18:02 GMT   |   Update On 2019-11-24 18:02 GMT
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல விரும்பிய பாத்திமாவுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.
கொச்சி:

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து சர்ச்சைக்குரிய இயக்கவாதி ரெஹனா பாத்திமா என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் செல்ல முயன்றார். ஆனால் பக்தர்கள் போராட்டம் காரணமாக அவர் திரும்பிச்சென்றார்.

இந்த ஆண்டு அவர் கொச்சி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் சபரிமலை கோவிலுக்கு செல்ல விரும்புவதால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தார்.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இந்த சூழ்நிலையில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது. இதுதொடர்பாக அவர் சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவு பெற்றுவந்தால் மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படும்’’ என்றார்.
Tags:    

Similar News