செய்திகள்
கையெறி குண்டு தாக்குதல் நடந்த இடம்

மணிப்பூர் சட்டசபை வளாகம் அருகே கையெறி குண்டு வீச்சு - சிஆர்பிஎப் வீரர்கள் 2 பேர் காயம்

Published On 2019-11-22 13:45 GMT   |   Update On 2019-11-22 13:45 GMT
மணிப்பூர் மாநில சட்டசபை வளாகம் அருகே அடையாளம் தெரியாத சிலர் கையெறி குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர்.
இம்பால்:

மணிப்பூர் மாநில சட்டசபை வளாகத்தில் அடையாளம் தெரியாத சிலர் கையெறி குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த பாதுகாப்பு படையினர் காயமடைந்த வீரர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டசபை வளாகத்தில் கையெறி குண்டுகள் வீசப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News