செய்திகள்
81 கிலோ லட்டு வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முலாயம் சிங் யாதவ்
சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் தனது 81-வது பிறந்தநாளை இன்று விமரிசையாக கொண்டாடினார்.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக முன்னர் பதவி வகித்தவர் முலாயம் சிங் யாதவ். 1996-ம் ஆண்டு பாதுகாப்புத்துறை மந்திரியாகவும் பணியாற்றியுள்ளார். இவர் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும் ஆவார்.
இந்நிலையில், முலாயம்சிங் யாதவ் தனது 81வது பிறந்தநாளை இன்று லக்னோவில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடினார்.
வழக்கமாக வெட்டும் பிறந்தநாள் கேக் உடன் 81 கிலோ எடை உடைய மிகப்பெரிய லட்டும் வெட்டப்பட்டது. முலாயம்சிங் யாதவின் மகனும் சமாஜ்வாடி கட்சியின் தற்போதைய தலைவருமான அகிலேஷ் யாதவ், கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் முலாயம் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.