செய்திகள்
ராகுல் காந்தி

பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்கவேண்டும் - பினராயி விஜயனுக்கு ராகுல் கடிதம்

Published On 2019-11-21 14:17 GMT   |   Update On 2019-11-21 14:17 GMT
கேரளாவில் பாம்பு கடித்து இறந்த 10 வயது சிறுமிக்கு நிதி உதவி அளிக்கவேண்டும் என முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:

கேரளா மாநிலம் வயநாட்டு அருகே சுல்தான்பத்தேரியை சேர்ந்தவர் வக்கீல் அப்துல் அஜிஸ். இவரது மனைவி சாஜனா. இவரும் வக்கீலாக உள்ளார். இவர்களின் மகள் ‌ஷகாலா (10). இவர் சுல்தான் பத்தேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை 3.30 மணிக்கு மாணவி ‌ஷகாலா பள்ளி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார். பள்ளி வகுப்பறையில் உள்ள ஒரு சிறிய துவாரத்தில் இருந்த பாம்பு ‌ஷகாலாவை கடித்திருப்பது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த ‌ஷகாலாவின் பெற்றோர் மகளை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ‌ஷகாலா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாம்பு கடித்து இறந்த 10 வயது சிறுமியின் குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்கவேண்டும் என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், பாம்பு கடித்து உயிரிழந்த 10 வயது சிறுமியின் குடும்பத்துக்கு தேவையான நிதி உதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News