செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரம்

ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல்- பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை

Published On 2019-11-19 05:24 GMT   |   Update On 2019-11-19 05:24 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. 49 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 2000க்கும் அதிகமான வார்டு உறுப்பினர்களுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 
Tags:    

Similar News