செய்திகள்
ராம்தாஸ் அத்வாலே

பாஜக- சிவசேனா ஆட்சி அமையும்: ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை

Published On 2019-11-19 01:55 GMT   |   Update On 2019-11-19 01:55 GMT
மகாராஷ்டிராவில் பா.ஜனதா - சிவசேனா ஆட்சி அமையும் என மத்திய மந்திரியும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
மும்பை :

மகாராஷ்டிராவில் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக பா.ஜனதா-சிவசேனா கூட்டணி உடைந்தது. இதையடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது.

இந்தநிலையில் மராட்டியத்தில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய மந்திரியும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

நான் அமித்ஷாவிடம், நீங்கள் தலையிட்டால் புதிய வழி பிறக்கும் என கூறினேன். அப்போது ‘‘அவர் (அமித்ஷா) கவலைப்படாமல் இருங்கள், எல்லாம் சரியாகிவிடும். பா.ஜனதா, சிவசேனா ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்கும்'' என என்னிடம் கூறினார்.



காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 44 எம்.எல்.ஏ.க்களின் ஒட்டுமொத்த ஆதரவு இல்லாமல் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆக முடியாது. எனவே அவர்கள் துணை முதல்-மந்திரி பதவியை ஏற்றுக்கொண்டு, முக்கிய இலாகாக்களை பகிர்ந்து கொள்ளலாம். சிவசேனா அவர்களின் நிலைப்பாட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும். பா.ஜனதா, சிவசேனாவும் உட்கார்ந்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். சிவசேனாவுக்கு சில ஆண்டுகளுக்கு முதல்-மந்திரி பதவி வழங்குவது குறித்து பா.ஜனதாவும் யோசிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News