செய்திகள்
பாதுகாப்பு பணியில் போலீசார்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேர் கைது

Published On 2019-11-16 16:16 GMT   |   Update On 2019-11-16 16:16 GMT
காஷ்மீரில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீநகர்:

காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபோர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 5 பேர் சுற்றித் திரிந்துள்ளனர். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News