செய்திகள்
சித்தரிக்கப்பட்ட படம்

தோழன் நீரில் மூழ்கி உயிரிழப்பதை வீடியோ எடுத்த சகநண்பர்கள்

Published On 2019-11-16 12:36 GMT   |   Update On 2019-11-16 12:36 GMT
கர்நாடகாவில் தங்கள் நண்பன் நீரில் மூழ்கி உயிரிழப்பதை மற்ற சகாக்கள் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர்:

கர்நாடகாவில் கலாபுர்கி மாவட்டத்தின் புறநகர் பகுதியில் கைவிடப்பட்டு ஆள்நடமாட்டமில்லாத ஒரு கல்குவாரி குட்டையில் நேற்று மாலை வாலிபர்கள் சிலர் குழுவாக குளிக்க சென்றுள்ளனர். 

குளித்துக்கொண்டிருக்கும்போது ஜாபர் என்ற வாலிபர் கரைக்கு நீந்தி வர முயற்சி செய்துள்ளார். ஆனால், நீந்த இயலாமல் நீரில் தத்தளித்தார். கரையில் நின்ற அவரது நண்பர்கள் அவரை பார்த்து சிரித்தனர்.

அதன் பின்பு தான் மூழ்குவதை உணர்ந்த ஜாபர் கையை தண்ணீரின் மேற்பரப்பில் உயர்த்தி நண்பர்களை உதவிக்கு அழைத்தார். ஆனால், நண்பருக்கு உதவ முன்வராமல் அவர் மூழ்குவதை வீடியோவாக பதிவு செய்தனர்.  இதையடுத்து, நீரீல் மூழ்கிய ஜாபர் மூச்சுத்திணறி, பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஜாபரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நண்பர்களின் மொபைலில் இருந்த இந்த வீடியோவை பார்த்து மேற்கண்ட தகவல்களை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News