செய்திகள்
சித்தரிப்பு படம்

டெல்லி ஓட்டலில் பிணமாக கிடந்த நியூசிலாந்து பெண் - இந்திய முறைப்படி திருமணம் செய்ய வந்தவர்

Published On 2019-11-16 10:51 GMT   |   Update On 2019-11-16 10:51 GMT
இந்திய முறைப்படி திருமணம் செய்துக் கொள்வதற்காக ஆஸ்திரேலியாவை சேர்ந்த காதலருடன் டெல்லி வந்த 49 வயது நியூசிலாந்து பெண் இன்று ஓட்டல் அறையில் பிணமாக கிடந்தார்.
புதுடெல்லி:

நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் டுய்யால்லி போல்லி ஆன்னி(49). ஆஸ்திரேலியாவை சேர்ந்த நண்பரை உயிருக்கு உயிராக காதலித்த ஆன்னி, இந்திய முறைப்படி அவரை திருமணம் செய்துக்கொள்ள விரும்பினார்.

இதற்காக அவர்கள் இருவரும் சமீபத்தில் டெல்லி வந்தனர். பார்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை ஓட்டல் அறையில் ஆன்னி மயங்கிய நிலையில் கிடப்பதை கண்ட காதலர், ஓட்டல் நிர்வாகத்துக்கு தகவல் அளித்தார்.



அங்கிருந்தவர்கள் உதவியுடன் உடனடியாக அவரை லேடி ஹார்டிங்கே மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆன்னியின் உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆன்னி திடீர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே எதையும் உறுதிப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டனர்.
Tags:    

Similar News