செய்திகள்
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் புறப்பட்டார் மோடி
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரேசில் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
புதுடெல்லி:
பிரேசில் நாட்டில் நாளையும் நாளை மறுதினமும் (நவம்பர் 13, 14), 11-வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற உள்ளது. புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டுச் சென்றார்.
பிரிக்ஸ் மாநாட்டின் இடையே பிரேசில் அதிபர் போல்சோனரோ, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோரை மோடி சந்தித்து பேச உள்ளார்.