செய்திகள்
என் குடும்பத்தினரை பாதுகாக்க களைப்பின்றி உழைத்த சகோதர, சகோதரிகளுக்கு நன்றி - ராகுல் காந்தி
என்னையும் எனது குடும்பத்தினரையும் பாதுகாக்க களைப்பின்றி உழைத்த சிறப்பு பாதுகாப்பு படை சகோதர, சகோதரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:
என்னையும் எனது குடும்பத்தினரையும் பாதுகாக்க களைப்பின்றி உழைத்த சிறப்பு பாதுகாப்பு படை சகோதர, சகோதரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த ’எஸ்.பி.ஜி.’ எனப்படும் சிறப்பு படை பாதுகாப்பை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பை பலமுறை மீறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
’எஸ்.பி.ஜி.’க்கு மாற்றாக ‘சி.ஆர்.பி.எப்.’ எனப்படும் துணை ராணுவ படையினரின் பாதுகாப்பு இவர்களுக்கு இந்தியா முழுவதும் அளிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், என்னையும் எனது குடும்பத்தினரையும் பாதுகாக்க இத்தனை ஆண்டுகளாக களைப்பின்றி உழைத்த சகோதர, சகோதரிகளுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இன்றிரவு வெளியிட்டுள்ள பதிவில், ‘என்னையும் எனது குடும்பத்தினரையும் பாதுகாக்க களைப்பின்றி உழைத்த சிறப்பு பாதுகாப்பு படை சகோதர, சகோதரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களது அர்ப்பணிப்புணர்வு, அன்பு மற்றும் படிப்பினை அடிப்படையில் நீங்கள் தொடர்ந்து அளித்த ஆதரவு ஆகியவற்றும் நன்றி. உங்களின் எதிர்காலம் சிறப்பாக அமையை நல்வாழ்த்துக்கள்!’ என குறிப்பிட்டுள்ளார்.