செய்திகள்
மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர்

5 லட்சம் பெட்ரோல், டீசல் கார்கள் மின்சார கார்களாக மாற்றப்படும் - மத்திய மந்திரி தகவல்

Published On 2019-11-02 18:34 GMT   |   Update On 2019-11-02 18:34 GMT
மத்திய அரசின் பயன்பாட்டில் உள்ள 5 லட்சம் பெட்ரோல், டீசல் கார்கள் மின்சார கார்களாக மாற்றப்படும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மின்சார வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, “மத்திய அரசு மற்றும் அதன் அலுவலகங்களில் தற்போது உள்ள 5 லட்சம் பெட்ரோல், டீசல் கார்கள் படிப்படியாக மின்சார கார்களாக மாற்றப்படும்.

இதன் மூலம் ஆண்டுக்கு 83.20 கோடி லிட்டர் எரிபொருள் மிச்சமாகும். அந்த கார்கள் வெளியிடும் 22.3 கோடி டன் கார்பன்டை ஆக்சைடும் தவிர்க்கப்படும்” என்றார். 
Tags:    

Similar News