செய்திகள்
குமரி கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்

குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

Published On 2019-10-30 04:25 GMT   |   Update On 2019-10-30 06:53 GMT
குமரி கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வரும் நிலையில், குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிய நிலையில், தற்போது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடகிழக்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.




மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Tags:    

Similar News