செய்திகள்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து வாகனத்தின் மீது இன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டுருப்காம் பகுதியில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். உயர் ரக துப்பாக்கியால் 7 முறை அதிரடியாக சுட்டனர்.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டுருப்காம் பகுதியில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். உயர் ரக துப்பாக்கியால் 7 முறை அதிரடியாக சுட்டனர்.
ராணுவத்தினர் எதிர்த்தாக்குதல் நடத்தியதால் பயங்கரவாதிகள் பின்வாங்கி ஓட்டம் பிடித்தனர். இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை கைது செய்ய பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.