செய்திகள்
ப.சிதம்பரம்

ப.சிதம்பரத்துக்கு உடல் நலக்குறைவு - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

Published On 2019-10-28 13:12 GMT   |   Update On 2019-10-28 13:12 GMT
ஐ.என்.எக்ஸ்.மீடியா முறைகேடு வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் உடலநலக் குறைவால் இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ்.மீடியா முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, ஜாமீன் பெற்றுள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில், சிறையில் இருக்கும் அவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டதால் இன்று மாலை 5.40 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து வருகின்றனர்.

அவர் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுவாரா? அல்லது, வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று உடனடியாக திகார் சிறைக்கு கொண்டு வரப்படுவாரா? என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Tags:    

Similar News