செய்திகள்
ப.சிதம்பரம்

பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பதை காங். தொண்டர்கள் நம்ப வேண்டும்- ப.சிதம்பரம்

Published On 2019-10-26 08:43 GMT   |   Update On 2019-10-26 08:43 GMT
தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் கண்டிப்பாக நம்ப வேண்டும் என்று ப.சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவர் சார்பில் அவரது குடும்பத்தினர் டுவிட்டர் பதிவில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மகாராஷ்டிரா, அரியானா சட்டமன்ற தேர்தல் முடிவு குறித்து ப.சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் கண்டிப்பாக நம்ப வேண்டும். மேலும் அமைதியான, நிதானமான நாட்டுப்பற்று மூலம் வலிமையான தேசியவாதத்தை வீழ்த்த முடியும்.

பா.ஜனதா அரசு ஒட்டுமொத்த மக்களையும், அனைத்து அமைப்புகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க தீர்மானித்தது. ஆனால் மகாராஷ்டிரா, அரியானா தேர்தல் முடிவுகள் பா.ஜனதாவிடம் இருந்து அந்த கட்டுப்பாட்டை மக்கள் திருப்பி எடுத்துக் கொண்டார்கள் என்பதை காட்டுகின்றன.

தற்போது அரசு அமைப்புகள் தங்கள் சுதந்திர தன்மையை உறுதி செய்ய வேண்டிய நேரமாகும். அவர்கள் மக்களை தோற்க செய்யமாட்டார்கள் என்பதை நம்புகிறேன்.

தேர்தலில் கூடுதல் இடங்களை பிடித்ததற்காக சரத்பவார், பூபிந்தர்சிங் ஹுடா, குமாரி செல்ஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜனதா வேட்பாளர்களை வீழ்த்திய துணிச்சலான காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பாராட் டுகளை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News