செய்திகள்
அரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள்: பாஜக - காங்கிரஸ் கடும் போட்டி
அரியானா சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
சண்டிகர்:
90 இடங்களைக் கொண்ட அரியானாவில் முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் (பா.ஜ.க.), முன்னாள் முதல் மந்திரி பூபேந்தர் சிங் ஹூடா (காங்கிரஸ்), அபய் சிங் (இந்திய தேசிய லோக்தளம்), ஜனநாயக் ஜனதா தலைவர் துஷ்யந்த் சவுதாலா உள்பட 1,169 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் 68 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
இந்த மாநிலத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலை பெற்றது.
அரியானாவில் பா.ஜ.க. கூட்டணி 40 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 32 தொகுதிகளிலும், மற்றவை 8 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் அங்கு ஆட்சி அமைப்பதில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.