செய்திகள்
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி

நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி வீட்டுக்கு சென்று மம்தா வாழ்த்து

Published On 2019-10-16 23:47 GMT   |   Update On 2019-10-16 23:47 GMT
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி வீட்டுக்கு சென்ற மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவை சேர்ந்த பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் மற்றும் மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அபிஜித் பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவு வெளியிட்டார்.



இந்த நிலையில் கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் உள்ள அபிஜித் பானர்ஜி வீட்டுக்கு மம்தா பானர்ஜி நேற்று சென்றார். அங்கு அவர் அபிஜித் பானர்ஜியின் தாயார் நிர்மலா பானர்ஜியை சந்தித்தார். நலம் விசாரித்தார். அவரது மகன் அபிஜித் பானர்ஜி நோபல் பரிசு வென்றதற்காக தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். அமெரிக்காவில் உள்ள அபிஜித் பானர்ஜி, வரும் 22-ந் தேதி இரவு கொல்கத்தா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News