செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் பலி
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் பலியானார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தின் இன்று அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பெண்மணி ஒருவர் பலியானார் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் ராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இந்திய தரப்பினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.