செய்திகள்
இடிந்து விழுந்த வீடு

உ.பி.யில் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆனது - பிரியங்கா இரங்கல்

Published On 2019-10-14 13:09 GMT   |   Update On 2019-10-14 13:09 GMT
உத்தர பிரதேசம் மாநிலத்தில் இன்று கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் மாடி வீடு இடிந்து தரைமட்டமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலம், மாவ் மாவட்டம், முகமதாபாத் அருகே உள்ள வாலித்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை சமையல் செய்துகொண்டிருந்தபோது எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது.

இதனால் 2 மாடிகளை கொண்ட அந்த வீட்டின் ஒரு பகுதி  இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.


 
தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 15 பேரில் 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் இன்று மாலை நிலவரப்பட்டி பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு  உடனடியாக தேவையான நிவாரண உதவி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Tags:    

Similar News