செய்திகள்
தேடுதல் பணியில் பாதுகாப்பு படையினர்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீச்சு - 3 பேர் காயம்

Published On 2019-10-12 10:27 GMT   |   Update On 2019-10-12 10:27 GMT
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஹரிசிங் சாலையில் பயங்கரவாதிகள் சிலர் புகுந்தனர். அவர்கள் தங்களிடம் இருந்த கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதைத்தொடர்ந்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த தாக்குதலில் 3 பேர் காயம் அடைந்தனர். அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த காரின் கதவுகள் சேதமடைந்தன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவலறிந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். கையெறி குண்டு வீச்சை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News