செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீச்சு - 3 பேர் காயம்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஹரிசிங் சாலையில் பயங்கரவாதிகள் சிலர் புகுந்தனர். அவர்கள் தங்களிடம் இருந்த கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதைத்தொடர்ந்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த தாக்குதலில் 3 பேர் காயம் அடைந்தனர். அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த காரின் கதவுகள் சேதமடைந்தன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவலறிந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். கையெறி குண்டு வீச்சை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.