செய்திகள்
பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு

பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் மரணம்

Published On 2019-10-11 14:17 GMT   |   Update On 2019-10-11 14:17 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் இன்று நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் மோர்ட்டார் குண்டு தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தார்.
ஜம்மு:

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

அவ்வகையில், கடந்த 15 ஆண்டுகால வரலாற்றில் மிக அதிகமான அளவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் படைகள் 2936 முறை எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது.



இந்த ஆண்டிலும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இதுவரை 2300-க்கும் அதிகமான முறை பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் நமது தரப்பில் 20-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா மற்றும் அக்னூர் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய கண்கானிப்பு நிலைகளின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிகளால் சுட்டும் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த மூன்று இந்திய வீரர்கள் அருகாமையில் உள்ள உத்தம்பூர் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் நாயக் சுபாஷ் தாப்பா என்பவர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார்.
Tags:    

Similar News