செய்திகள்
அகிலேஷ் யாதவ் - ருக்மனி தேவி நிஷத்

பூலான் தேவியின் தங்கை சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்

Published On 2019-10-06 12:48 GMT   |   Update On 2019-10-06 12:48 GMT
டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைகூட்ட தலைவியும் பாராளுமன்ற உறுப்பினருமான பூலான் தேவியின் தங்கை இன்று சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் மிகப்பெரிய வழிப்பறி கொள்ளை கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திவந்த பூலான் தேவி கடந்த 1983-ம் ஆண்டு போலீசில் சரண் அடைந்து சிறைக்கு சென்றார்.

தண்டனை காலம் முடிந்து விடுதலையான இவர் 1996-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மிர்சாபூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த 25-7-2011 அன்று டெல்லியில் உள்ள வீட்டில் மர்மநபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு முன்னதாக, தன்னை கூட்டாக சேர்ந்து கற்பழித்த ராஜபுத்திர இனத்தை சேர்ந்த 21 பேர் கொண்ட கும்பலை 1981-ம் ஆண்டில் தனது கூட்டாளிகள் துணையுடன் கான்பூர் தெஹத் மாவட்டத்தில் பூலான் தேவி சுட்டுக் கொன்றார்.

இந்நிலையில், லக்னோ நகரில் இன்று நடைபெற்ற  நிகழ்ச்சியில் உ.பி.முன்னாள் முதல் மந்திரியும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் முன்னிலையில் மறைந்த பூலான் தேவியின் தங்கை ருக்மனி தேவி நிஷத் இன்று சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். 
Tags:    

Similar News