செய்திகள்
அரியானாவில் சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
அரியானா மாநிலத்தில் சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தின் அம்பாலா கன்ட் என்ற பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தின் அருகே குடிசை அமைத்து கட்டிடத்தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்துவந்தார்.
இந்நிலையில், கட்டிடத்தின் சுவர் இன்று அதிகாலை திடீரென இடிந்து குடிசை மீது விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் சுவர் இடிந்து விழுந்ததில் குடிசையில் உறங்கிக்கொண்டிருந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.