செய்திகள்
சர்வதேச எல்லை வழியாக ஜம்முவில் ஊடுருவிய நபர் கைது
ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லை வழியாக இந்திய பகுதிக்குள் ஊடுருவிய நபரை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஜம்மு:
ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சர்வதேச எல்லையில் அக்னூர் பகுதி வழியாக ஒரு மர்ம நபர், இந்திய பகுதிக்குள் ஊடுருவினார். அவரது நடமாட்டத்தைக் கண்காணித்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், அங்கு விரைந்து சென்று அந்த நபரைப் பிடித்தனர்.
பின்னர் அவரை விசாரணைக்காக போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சர்வதேச எல்லையில் அக்னூர் பகுதி வழியாக ஒரு மர்ம நபர், இந்திய பகுதிக்குள் ஊடுருவினார். அவரது நடமாட்டத்தைக் கண்காணித்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், அங்கு விரைந்து சென்று அந்த நபரைப் பிடித்தனர்.
பின்னர் அவரை விசாரணைக்காக போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.