செய்திகள்
வெங்காயம் வியாபாரிகள் கையிருப்பு அளவுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு
வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள மத்திய அரசு வியாபாரிகள் கையிருப்பில் வைக்கும் வெங்காயத்தின் அளவுக்கும் இன்று கட்டுப்பாடு விதித்துள்ளது.
புதுடெல்லி:
உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு இன்று தடை விதித்தது.
மொத்த வியாபாரிகள் கையிருப்பில் வைக்கும் வெங்காயத்தின் அளவு 50 ஆயிரம் கிலோவுக்கு மிகாமலும், சில்லறை வியாபாரிகள் கையிருப்பில் வைக்கும் வெங்காயத்தின் அளவு 10 ஆயிரம் கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் எனவும் இந்த உத்தரவு நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு இன்று தடை விதித்தது.
மேலும், மத்திய அரசு மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் கையிருப்பில் வைக்கும் வெங்காயத்தின் அளவுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மொத்த வியாபாரிகள் கையிருப்பில் வைக்கும் வெங்காயத்தின் அளவு 50 ஆயிரம் கிலோவுக்கு மிகாமலும், சில்லறை வியாபாரிகள் கையிருப்பில் வைக்கும் வெங்காயத்தின் அளவு 10 ஆயிரம் கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் எனவும் இந்த உத்தரவு நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.