செய்திகள்
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நவராத்திரி வாழ்த்து
நவராத்திரி மற்றும் தசரா திருவிழா இன்று தொடங்குவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் நவராத்திரி மற்றும் தசரா திருவிழா இன்று தொடங்குகிறது.
இந்நிலையில், நவராத்திரி மற்றும் தசரா திருவிழா இன்று தொடங்குவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நவராத்திரி மற்றும் தசரா விழா கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்த திருவிழா காலம் மக்களுக்கு புதிய ஆர்வம், புதிய சக்தி, புதிய தீர்மானம் ஆகியவற்றை அளிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.