செய்திகள்
அசாமில் பேருந்து -வேன் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
அசாமின் சிப்சாகர் பகுதியில் பேருந்தும் வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
சிப்சாகர்:
அசாம் மாநிலம் சிப்சாகர் மாவட்டம் டிமோவ் என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று பயணிகள் பேருந்தும், டெம்போ டிராவலர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்தன.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அசாம் மாநிலம் சிப்சாகர் மாவட்டம் டிமோவ் என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று பயணிகள் பேருந்தும், டெம்போ டிராவலர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்தன.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.