செய்திகள்
மைசூரு காற்றாடி திருவிழா (கோப்பு படம்)

மைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா

Published On 2019-09-22 13:10 GMT   |   Update On 2019-09-22 13:10 GMT
கர்நாடக மாநிலத்தில் உள்ள அரண்மனை நகரமான மைசூருவில் தசரா பண்டிகையையொட்டி அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா முதல்முறையாக நடைபெறுகிறது.
பெங்களூரு:

தசரா பண்டிகையையொட்டி மைசூருவில் ஆண்டுதோறும் காற்றாடி பறக்கவிடும் திருவிழா  நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இதை சர்வதேச அளவிலான விழாவாக நடத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்தனர்.



இதைதொடர்ந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சீனா, மலேசியா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் உள்ளூரை சேர்ந்த 5 குழுவினரும் 8 வெளி மாநிலங்களிலிருந்து சிலரும் பங்கேற்கும் சர்வதேச காற்றாடி திருவிழா அரண்மனை நகரமான மைசூருவில் உள்ள லலிதா மஹால் அரண்மனை வளாகத்தில் உள்ள ஹெலிபேட் திடலில் அக்டோபர் 12 மற்றும் 13-தேதி நடைபெறும் என மைசூரு நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News