செய்திகள்
மாயாவதி

சாதிய சக்திகள் காங்கிரஸ் கட்சியால் பலமடைந்து வருகின்றன - மாயாவதி குற்றச்சாட்டு

Published On 2019-09-18 09:47 GMT   |   Update On 2019-09-18 11:11 GMT
காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டால் நாட்டில் சாதிய சக்திகள் பலமடைந்து வருவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.
லக்னோ:

ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களும் நேற்று காங்கிரஸ் கட்சிக்கு தாவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் ஆசைகாட்டி இழுத்து விட்டதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி குற்றம்சாட்டி இருந்தார்.



இதன்மூலம் தங்களுக்கு காங்கிரஸ் நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாகவும் தெரிவித்த மாயாவதி, காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டால் நாட்டில் சாதிய சக்திகள் பலமடைந்து வருவதாக மாயாவதி இன்று நேரடியாக குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டால் நாட்டில் சாதிய சக்திகள் பலமடைந்து வருகின்றன.

சாதிய சக்திகளை பலவீனப்படுத்துவதற்கு மாறாக அவற்றுக்கு எதிராக குரல் எழுப்பிவரும் சக்திகளைத்தான் காங்கிரஸ் பலவீனப்படுத்தி வருகிறது. மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News