செய்திகள்
விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமானம்

டிஆர்டிஓ சோதனை செய்த ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது

Published On 2019-09-17 08:22 GMT   |   Update On 2019-09-17 08:22 GMT
கர்நாடக மாநிலத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் ஆளில்லா விமானம் சோதனை ஓட்டத்தின்போது விழுந்து நொறுங்கியது.
சித்ரதுர்கா:

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ரஸ்டம்-2 என்ற ஆளில்லா விமானம் இன்று சோதனை செய்யப்பட்டது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள சல்லகேர் ஏரோநாட்டிகல் வானூர்தி சோதனை மையத்தில் இருந்து அனுப்பப்பட்ட இந்த ஆளில்லா விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் ஜோடி சிக்கனஹள்ளி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விழுந்து நொறுங்கியது.

இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், விழுந்து கிடந்த விமானத்தை பார்க்க திரண்டு வந்தனர். விமான விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் டிஆர்டிஓ அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

விமானம் விழுந்த இடத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
Tags:    

Similar News