செய்திகள்
ப.சிதம்பரம் (கோப்பு படம்)

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது டெல்லி ஐகோர்ட் நாளை விசாரணை

Published On 2019-09-11 14:15 GMT   |   Update On 2019-09-11 14:15 GMT
சி.பி.ஐ. நீதிமன்றம் விதித்த சிறைக் காவலை எதிர்த்தும் ஜாமீனில் விடுதலை செய்யக் கோரியும் டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரனைக்கு வருகிறது.
புதுடெல்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 19-ம் தேதி வரை அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார்.
 
இந்நிலையில், ஐஎன்எக்ஸ் முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்தும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



இந்த இரு மனுக்கள் மீதும் டெல்லி உயர் நீதிமன்றம் நாளை விசாரணை நடத்தவுள்ளது

இதற்கிடையே, ஐஎன்எக்ஸ் வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறையும் முடிவு செய்துள்ளது. இதற்காக ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றத்தில் நாளை மனு தாக்கல் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐஎன்எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக இம்மாத இறுதியில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Tags:    

Similar News